Monday, 30 April 2012
Sunday, 29 April 2012
உணவு தரக்கட்டுப்பாடு சட்டத்துக்கு முரணாக செயல்பட்டால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை- தினமலர் செய்தி
உணவு தரக்கட்டுப்பாடு சட்டத்துக்கு முரணாக செயல்பட்டால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை- தினமலர் செய்தி
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டத்திற்கு முரணாக, செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் மகேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இத்துறை மாவட்ட அலுவலகத்தை கலெக்டர் மகேஸ்வரன் திறந்து வைத்து காவேரிப்பட்டணத்தில் பால்பொருள் உற்பத்தி செய்யும் ஆகார்ஷ் டைரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு முதல் உரிமைத்தை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:
தரமான, பாதுகாக்கப்பட்ட உணவை தயாரிப்பதற்கும் அதை விற்பனை செய்வதற்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி அனைத்து வட்டாரங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்களும், மாவட்ட அளவில் நியமன அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அலுவலகம் பெங்களூரு சாலை பொதுப்பணித்துறை வளாகத்தில் செயல்படும். தயாரிக்கப்படும் உணவு மற்றும் விற்கப்படும் உணவுகளை ஆய்வு செய்வதற்கும் , உணவு மாதிரி எடுப்பதற்கும் இதில் தவறு செய்பவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, நோட்டீஸ் கொடுப்பது போன்றவை இந்த அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி அனைத்து உணவு பொருள் விற்னையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், மளிகை கடை, ஹோட்டல், டீ கடை, பேக்கரி, பழக்கடை, இறைச்சி கடை உள்ளிட்ட உணவு பொருள் நிலையங்கள் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டதுக்கு முரணாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால், இரண்டு லட்ச ரூபாய் வரை அபராதமும், உரிமம் பெறவில்லை என்றால், ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறுதெரிவித்தார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நியமன அலுவலர் கலைவாணி மற்றும் அனைத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இத்துறை மாவட்ட அலுவலகத்தை கலெக்டர் மகேஸ்வரன் திறந்து வைத்து காவேரிப்பட்டணத்தில் பால்பொருள் உற்பத்தி செய்யும் ஆகார்ஷ் டைரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு முதல் உரிமைத்தை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:
தரமான, பாதுகாக்கப்பட்ட உணவை தயாரிப்பதற்கும் அதை விற்பனை செய்வதற்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி அனைத்து வட்டாரங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்களும், மாவட்ட அளவில் நியமன அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அலுவலகம் பெங்களூரு சாலை பொதுப்பணித்துறை வளாகத்தில் செயல்படும். தயாரிக்கப்படும் உணவு மற்றும் விற்கப்படும் உணவுகளை ஆய்வு செய்வதற்கும் , உணவு மாதிரி எடுப்பதற்கும் இதில் தவறு செய்பவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, நோட்டீஸ் கொடுப்பது போன்றவை இந்த அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி அனைத்து உணவு பொருள் விற்னையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், மளிகை கடை, ஹோட்டல், டீ கடை, பேக்கரி, பழக்கடை, இறைச்சி கடை உள்ளிட்ட உணவு பொருள் நிலையங்கள் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டதுக்கு முரணாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால், இரண்டு லட்ச ரூபாய் வரை அபராதமும், உரிமம் பெறவில்லை என்றால், ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறுதெரிவித்தார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நியமன அலுவலர் கலைவாணி மற்றும் அனைத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்
Friday, 27 April 2012
Sunday, 22 April 2012
Friday, 20 April 2012
Saturday, 7 April 2012
Subscribe to:
Comments (Atom)





















