கேரள ஓட்டல்களில் சமையலறை பணியாளர்கள் தலை சொறிய தடை
ஆலப்புழா:உணவுப் பண்டங்களில் அசுத்தம் வராமல் தடுக்க, கேரளாவில் உள்ள ஓட்டல் சமையலறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தலை சொறிதல், நீளமான நகங்களை வளர்த்தல், பணியாற்றும்போது ஆடும் நகைகளை அணிவது போன்றவற்றிற்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் சில வாரங்களுக்கு முன், தனியார் ஓட்டலில் அரேபிய உணவான, “ஷவர்மா’வை விரும்பிச் சாப்பிட்ட, கல்லூரி மாணவர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ஓட்டல்களில் தீவிர சோதனை நடந்து வருகிறது. இதில், திருவனந்தபுரத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில், 473 ஓட்டல்களிடம் விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பல ஓட்டல்களில் அசுத்தம் காரணமாக, அபராதம் விதிக்கப்பட்டு, ஏழு லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டல்களில் தரமான உணவுகளை நுகர்வோருக்கு வழங்க ஏதுவாக எடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஓட்டல் அதிபர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.
நகைகள் கூடாது
நகைகள் கூடாது
அதன் ஒரு பகுதியாக, ஓட்டல்களின் சமையலறையில் பணியாற்றும் சமையலர் மற்றும் ஊழியர்கள் என, அனைவரும் பணியின்போது, தலையை சொறிதல் கூடாது; நீண்ட நகங்களை வளர்த்து பணியாற்றக் கூடாது; கழுத்து, கைகளில் அணிந்துள்ள நகைகள் பணியின்போது, ஆடுவதாக இருந்தால் அவற்றை அணிந்து கொண்டு பணி செய்யக் கூடாது போன்ற கடுமையான 30 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும், ஓட்டலில் சமையலறை மற்றும் உணவு பரிமாறும் பகுதிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மூன்று மாதத்திற்கொரு முறை தொற்றுநோய் குறித்து பரிசோதித்து சான்றிதழ் பெற்று அவற்றை ஓட்டல்களில் பாதுகாக்க வேண்டும்.
“பில்’ கட்டாயம்:
ஓட்டல்களில் நுகர்வோர் உணவு சாப்பிட்ட பிறகு, “பில்’ கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். ஊழியர்கள் மற்றும் நுகர்வோருக்கான கழிப்பறை, குளியலறை போன்றவை கண்டிப்பாக சமையலறையில் இருந்து தூரத்தில் அமைக்கப்பட வேண்டும். கழிவறைகளை தினமும் நான்கு முறை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் தானாகவே மூடிக்கொள்ளும் கதவுகள் பொருத்தப்பட வேண்டும்.இதற்கான உத்தரவை மாநில உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் பிறப்பித்துள்ளார்.
ஓட்டல்களில் நுகர்வோர் உணவு சாப்பிட்ட பிறகு, “பில்’ கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். ஊழியர்கள் மற்றும் நுகர்வோருக்கான கழிப்பறை, குளியலறை போன்றவை கண்டிப்பாக சமையலறையில் இருந்து தூரத்தில் அமைக்கப்பட வேண்டும். கழிவறைகளை தினமும் நான்கு முறை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் தானாகவே மூடிக்கொள்ளும் கதவுகள் பொருத்தப்பட வேண்டும்.இதற்கான உத்தரவை மாநில உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment